Pages

Monday, January 6, 2014

“தவறிப் பிறந்த தரளம்“ - மனதை நிரப்பிய தாராளக் குறும்படம்

Varunan  அண்ணாவின் a forgotten pearl குறும்பட சீடி கையில் கிடைத்தது. இப்போ தான் மன அமைதியான நேரம் என்பதால் போட்டு பார்த்தேன். ஏற்கனவே Iroshan சொல்லியிருந்தாலும். ஒரு சிறுவனின் போர் மனவடு, தந்தையின் குடும்ப குலைவு, தாயின் உடல் தேடல், அநாதரவான வெள்ளை உள்ளத்தின் நடத்தை அத்தனையையும் 10 நிமிடத்திற்குள் செப்பனிட்டு காட்டியிருப்பது அவரது கைதேர்ந்த தன்மையை காட்டுகிறது.
தந்தையாக வரும் தர்மலிங்கம் அண்ணாவின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை வார்த்தெடுக்கப்பட்ட கலைஞர். ஹர்த்தால், எழுத்துப்பிழை போன்றன அதற்குச் சாட்சி.
பிரியாவின் நடிப்புத்துறை வளர்ச்சியானது மிகப்பெரும் வளர்ச்சியாகும். எனக்கு “என்னுள்ளே“ பாடல் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் பாடல் வந்து 2 வருடங்களாக முதலே அவர் உடலில் 10 வருடத்துக்கான மாற்றம் நிகழந்து விட்டது. உடலில் கவனம் செலுத்தினால் நிச்சயம் ஈழ சினிமாத் துறையில் பல வருடங்கள் இதே இடத்தை தக்க வைக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
சிறுவன் - அவனைப் பற்றி ஒரே ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாலே போதும் அவன் பாத்திரத்துக்கான ஆதாரமாகிவிடும் இறுதிக் காட்சியில் வெறுப்போடு விறு விறு என ஒரு நடை நடக்கிறான் பாருங்கள்.. அவன் தரையிலல்ல எம் மனதில் தான் நடக்கிறான்.

ுக்கியமாக ஒலிச் சேர்க்கை... படத்தின் கவனத்தை இசை திசை திருப்பிவிடக் கூடாது என்பதற்காக அவதானமாக கையாண்டதுடன் இந்த உலங்கு வானூர்தியை எம் மனங்களுக்குள்ளால் பறக்க விட்டிருக்கிறார். விருது கொடுப்பாளர் கண்ணுக்கு இப்படம் தட்டுப்படுமோ தெரியாது ஆனால் ஒரு குறும்பட ரசிகளை நிச்சயம் பூரணப்படுத்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து... வாழ்த்துக்கள் அண்ணா

Thursday, January 2, 2014

மொழியின் நிலை சொல்லும் அழகிய குறும்படம் “இழிநிலை“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
தமிழ் என்பது எம் தாய் மொழி அதன் தாக்கம் நாகரிகத்தால் தொலைக்கப்பட்டாலும் உளவியலில் அதன் தாக்கம் எப்படி ஆளுமை செய்கிறது என்பதை ஒரு சின்னக் கதையைக் கருவை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படமாக “இழிநிலை“ அமைந்திருந்தாலும் அதன் திரை மொழி என்பது திரைக்கான கட்டுக் கோப்புடன் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு வெவ்வேறு கோணங்களில் பயணிப்பது போல காட்சி நகர்வு சென்றாலும் அவை சங்கமிக்கும் இடம் ஒரு திரைக்காட்சியின் பண்பட்ட இடமாகும் அந்த இடத்தை இயக்குனர் சரியாகக் கையாண்டிருக்கிறார்.
படத்தில் வந்து போன அத்தனை வசனங்களும் ஆழமானதும் அமைதியானதுமாக சென்றது படத்தின் ஓட்டத்தை சீர்குலைக்காமல் கொண்டு சென்றது எனலாம். அதற்கேற்றாற் போல் ஒத்தடம் கொடுப்பது போல இசை தொட்டுச் செல்கிறது.
கமராவும் இசையும் சங்கமித்த என்னைக் கவர்ந்த ஒரு இடம் இருக்கிறது கட்டாயம் அதை சொல்லியே ஆக வேண்டும். மாணவன் வகுப்பால் வெளியேறி வருகிறான். அப்போது கமரா எதிரே இருக்கும் சின்ன தூண்களுக்குப் பின்னால் இருக்கிறது. அவனது நகர்வுகளுக்காக கமரா நகரும் போது ஒவ்வொரு சிறு தூணும் குறுக்கறுக்கிறது. அதற்கேற்றற் போல இசை காதை நிரப்புகிறது. படத்தின் ஆரம்பத்தில் இது வருவதால் முதலில் உணர முடியாவிட்டாலும் படம் பர்த்தபின்னர் யோசித்தால் அக்காட்சியும் அவன் மனநிலையும் ஒத்துப் போவது தெரியும்.
(மிஸ்கின் பைத்தியமான எனக்கு அந்த இடம் அவரைத் தான் கண் முன் கொண்டுவந்தது)
தாயாக வருபவரது முகபாவம் சிறப்பாக இருந்தது.
மொத்தத்தில் இழிநிலை எனக்குப் பிடித்திருக்கிறது (தனிப்பட்ட கருத்து)
இயக்குனர் அகீபனுக்கும் அவர் குழுவுக்கும் பாராட்டுக்கள்

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா