Pages

Monday, March 10, 2014

கலர் கலராக எம் தேசத்தைக் காட்டிய மது குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சகோதரன் பெலீசியன் இயக்கத்தில் “மது“ என்ற குறும்படம் வெளியாகியகியிருந்தது.
அதன் கமரா கலைஞனான “சந்துரு“ வின் சில காட்சி செதுக்கல்கள் மீள மீள பார்க்க வைத்தது. காரணம் அந்த நிறக் கலவை. கண்ணிற்குறுத்தல் இல்லாத பசுமை செதுக்கல் அது.
இயக்குனர் பெலிசியனின் முதல் குறும்படத்துக்கு (நம்ம ஊரு) எழுதிய விமர்சனம் குறையோடு அப்படியே கிடக்கிறது. சரி அதில் கூற வந்த முக்கியத்தையும் இதிலேயே குறிப்பிட்டு போகலாம். அந்த குறும்படம் சற்று நேரம் இழுத்தடிக்கப்பட்ட படம் என குற்றம் சாட்டப்பட்டாலும் அதன் கரு எனக்கு பிடித்திருந்தது அதை விட அந்த எழுத்து ஓடும் காட்சியிலேயே எம் பாரம்பரிய கலையைக் காட்டி அந்த படம் சொல்ல வந்த கருத்தை அங்கேயே சொல்லியிருப்பார்.
அதே போல இக்குறும்படத்திலும் காட்சிகளுக்காக அவர் தெரிவு செய்த இடம் அருமையானவையாகும்.
நடிப்பை சொதப்பாத பாத்திரங்களும் படத்தின் பிளசுக்கு காரணமாகும்.
ஆனால் நாயகனின் வயதும் தோற்றமும் சற்று உறுத்தலாக இருந்தாலும் நானும் ஒரு படைப்பாளி என்ற வகையில் கை வசம் எம்மிடம் இருக்கும் வளமே பரதை தீர்மானிக்கிறது என்பதை உணர்வேன். ஆர்ப்பாட்டமில்லாத இசையோடு அருந்திய மது மொத்தத்தில் ஒரு பசுமைப் புரட்சி

Monday, March 3, 2014

கண்களை கவர்ந்த “நெஞ்சுக்குள்ளே“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
(இது விமர்சனமல்ல... எனது பார்வை மட்டுமே)
கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகியிருந்த ஒரு காதல் படைப்புத் தான் “நெஞ்சுக்குள்ளே“ என்ற குறும்படமாகும்.
இந்தப்படத்தில் இயக்குனரிடம் பிடித்திருந்த விடயம் ஒன்று என்னவென்றால் எம்மில் பலர் யாழப்பாணத்தை ஒரு மங்கலான நிறத்துடனும் வறுமைக் கோடுகள் வன்முறை நிறைந்ததுமாகவே காட்டிக் கொண்டிருக்க அவரோ எல்லோருக்கும் ஒரு பணக்கார அழகிய யாழ்ப்பாணத்தைக் காட்டியிருக்கிறார். இதற்கு முன்னரும் “என்னுள் என்ன மாற்றமோ“ படத்தில் அவர் துணிந்து இறங்கிய விதத்துக்கு பாராட்டியிருந்தேன்.
முதலில் இதற்கொரு பாராட்டு.
மிக முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது ஒளிப்பதிவாகும். எமக்கிருக்கும் வளத்தில் படப்பிடிப்பாளன் தான் வெளிச்சத்தையும் கவனிக்க  வேண்டிய கட்டாயமிருக்கையில் அவர் காட்சிப் பக்கங்களை கையாண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது.
அத்துடன் பாத்திரங்களின் நடிப்பில் நொண்டியாக வந்து போகும் அந்த பாத்திரமும் (வின்சன்) ஒரு தடவை வந்து வக்கிர முகத்தை காட்டிப் போகும் அந்த கத்திக் குத்தாளனும் (யுரா) திரும்பி பார்க்க வைத்தார்கள்.
படத்தின் பல ஜதார்த்த மீறல்கள் திரைக்கதைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்பதுடன் சிந்துஜாவின் “உருகிடவா“ இசையை ரசித்து விட்டு எதிர் பார்ப்போடு பார்க்க போன எமக்கு “ஓநாயும் ஆட்டுக் குட்டியும்“ இசையை கேட்டதும் மனது ஒரு “திரில்லர்“ படத்துக்குள் நுழைந்து விட்டது.

அடுத்த விடயம் திரைக்கதை விடயம். கதையை இசைப்பிரியன் (லண்டன்) அவர்கள் வடித்திருந்தாலும் ஒரு ஆழமான காதலை சொல்ல முற்பட்ட கதைக்கு பாராட்டுக்கள். ஆனால் படம் பார்த்து முடித்து விட்டு கதையை மீள யோசிக்கையில் இதற்கு ஏன் இவ்வளவு நேரம் பிடித்தது என்று எண்ணத் தோன்றுகிறது. இதில் யாரிலும் குற்றம் கூற முடியாது காரணம் இயக்குனரும் திரைக்கதையாளரும் வேறு வேறாக இருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்

குறிப்பு - இதை விமர்சனமாக எழுதாமைக்கு காரணம். ஏற்கனவே என்னுள் என்ன மாற்றத்துக்கு விமர்சனம் சொன்னதால் தான் கவிமாறனுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி வந்ததாக கலையுலக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் நான் ஒரு படைப்பாளியான பின்னர் விமர்சனம் எழுதுவதில்லை. காரணம் படைப்பாளி என்பது வேறு விமர்சகன் என்பது வேறு (என் தனிப்பட்ட கருத்து) அப்புறம் ஏன் என்று தான் ஒரு சில விடயத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா