Pages

Monday, March 10, 2014

கலர் கலராக எம் தேசத்தைக் காட்டிய மது குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சகோதரன் பெலீசியன் இயக்கத்தில் “மது“ என்ற குறும்படம் வெளியாகியகியிருந்தது.
அதன் கமரா கலைஞனான “சந்துரு“ வின் சில காட்சி செதுக்கல்கள் மீள மீள பார்க்க வைத்தது. காரணம் அந்த நிறக் கலவை. கண்ணிற்குறுத்தல் இல்லாத பசுமை செதுக்கல் அது.
இயக்குனர் பெலிசியனின் முதல் குறும்படத்துக்கு (நம்ம ஊரு) எழுதிய விமர்சனம் குறையோடு அப்படியே கிடக்கிறது. சரி அதில் கூற வந்த முக்கியத்தையும் இதிலேயே குறிப்பிட்டு போகலாம். அந்த குறும்படம் சற்று நேரம் இழுத்தடிக்கப்பட்ட படம் என குற்றம் சாட்டப்பட்டாலும் அதன் கரு எனக்கு பிடித்திருந்தது அதை விட அந்த எழுத்து ஓடும் காட்சியிலேயே எம் பாரம்பரிய கலையைக் காட்டி அந்த படம் சொல்ல வந்த கருத்தை அங்கேயே சொல்லியிருப்பார்.
அதே போல இக்குறும்படத்திலும் காட்சிகளுக்காக அவர் தெரிவு செய்த இடம் அருமையானவையாகும்.
நடிப்பை சொதப்பாத பாத்திரங்களும் படத்தின் பிளசுக்கு காரணமாகும்.
ஆனால் நாயகனின் வயதும் தோற்றமும் சற்று உறுத்தலாக இருந்தாலும் நானும் ஒரு படைப்பாளி என்ற வகையில் கை வசம் எம்மிடம் இருக்கும் வளமே பரதை தீர்மானிக்கிறது என்பதை உணர்வேன். ஆர்ப்பாட்டமில்லாத இசையோடு அருந்திய மது மொத்தத்தில் ஒரு பசுமைப் புரட்சி

0 comments:

Post a Comment