Pages

Friday, February 28, 2014

மனசைத் தொட்ட “தூர தேசம்“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்காக முதலில் எனது பாராட்டை இயக்குனருக்கு தெரிவித்துக் கொண்டு நகர்கிறேன்.
புலம் பெயர் தேசத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்த வலி.
அளவான பாத்திரங்கள். ஜதார்த்தத்தை மீறாத நடிப்பு.
மிக மிக முக்கியமாக வைக்கப்பட்டிருந்த frame கள் பிடித்திருந்தது. எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டம் காட்டாமல் கண்ணை உறுத்தாமல் இருந்தது.
முதல் காட்சியிலேயே இயக்குனர் ஒரு சில செக்கனுக்குள் நாயகனது பல செயற்பாடுகளை காட்டி முடித்திருக்கிறார். அதற்கேற்றாற் போல நாயகனும் இயல்பாக நடித்திருந்தார்.
குறுகிய செக்கனுக்குள் காட்ச மாற்றக் கூடாது என்ற விதிமுறை சொல்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது ஆனால் என்னால் எந்தவித உறுத்தலுமின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது. இந்த இடத்தில் எடிட்டரும் பாராட்டப்பட வேண்டியவரே.
ஒரு விடயம் சின்ன உறுத்தலாக இருந்தது. ஒலிச் சேர்க்கை சரியாக கவனிக்கப்படவில்லை. மென்மையான ஒலியாகவும். ஒரு முறை வலப்பக்கத்தில் இருந்தும் ஒரு முறை இடப்பக்கத்தில் இருந்தும் வருவதால் ஹெட் போன் போட்டிருந்து பார்த்த நான் அடிக்கடி காட்சிக் களத்துக்கு வெளியே போய் வந்தது போல ஒரு உணர்வு எழுந்தது.
படக் குழுவினருக்கு என் உளப்பூர்வ வாழ்த்துக்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா




0 comments:

Post a Comment