Pages

Thursday, January 2, 2014

மொழியின் நிலை சொல்லும் அழகிய குறும்படம் “இழிநிலை“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
தமிழ் என்பது எம் தாய் மொழி அதன் தாக்கம் நாகரிகத்தால் தொலைக்கப்பட்டாலும் உளவியலில் அதன் தாக்கம் எப்படி ஆளுமை செய்கிறது என்பதை ஒரு சின்னக் கதையைக் கருவை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படமாக “இழிநிலை“ அமைந்திருந்தாலும் அதன் திரை மொழி என்பது திரைக்கான கட்டுக் கோப்புடன் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு வெவ்வேறு கோணங்களில் பயணிப்பது போல காட்சி நகர்வு சென்றாலும் அவை சங்கமிக்கும் இடம் ஒரு திரைக்காட்சியின் பண்பட்ட இடமாகும் அந்த இடத்தை இயக்குனர் சரியாகக் கையாண்டிருக்கிறார்.
படத்தில் வந்து போன அத்தனை வசனங்களும் ஆழமானதும் அமைதியானதுமாக சென்றது படத்தின் ஓட்டத்தை சீர்குலைக்காமல் கொண்டு சென்றது எனலாம். அதற்கேற்றாற் போல் ஒத்தடம் கொடுப்பது போல இசை தொட்டுச் செல்கிறது.
கமராவும் இசையும் சங்கமித்த என்னைக் கவர்ந்த ஒரு இடம் இருக்கிறது கட்டாயம் அதை சொல்லியே ஆக வேண்டும். மாணவன் வகுப்பால் வெளியேறி வருகிறான். அப்போது கமரா எதிரே இருக்கும் சின்ன தூண்களுக்குப் பின்னால் இருக்கிறது. அவனது நகர்வுகளுக்காக கமரா நகரும் போது ஒவ்வொரு சிறு தூணும் குறுக்கறுக்கிறது. அதற்கேற்றற் போல இசை காதை நிரப்புகிறது. படத்தின் ஆரம்பத்தில் இது வருவதால் முதலில் உணர முடியாவிட்டாலும் படம் பர்த்தபின்னர் யோசித்தால் அக்காட்சியும் அவன் மனநிலையும் ஒத்துப் போவது தெரியும்.
(மிஸ்கின் பைத்தியமான எனக்கு அந்த இடம் அவரைத் தான் கண் முன் கொண்டுவந்தது)
தாயாக வருபவரது முகபாவம் சிறப்பாக இருந்தது.
மொத்தத்தில் இழிநிலை எனக்குப் பிடித்திருக்கிறது (தனிப்பட்ட கருத்து)
இயக்குனர் அகீபனுக்கும் அவர் குழுவுக்கும் பாராட்டுக்கள்

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


0 comments:

Post a Comment